பாம் எண்ணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்த வர்த்தமானி தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்று காலையும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. தொடர்ந்தும் கலநதுரையாடல்களை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வர்த்தமானி குறித்து எங்கள் தரப்பிலும் பல மாறுப்பட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. தொடர்ந்தும் சில மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள உள்ளன என்றார்.