கைத்தொலைபேசியால் பரிதாபமாக உயிரை விட்ட 14 வயது மாணவன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைத்தொலைபேசியால் பரிதாபமாக உயிரை விட்ட 14 வயது மாணவன்!


கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக ஒன்லைன் கேம் விளையாடிய பாடசாலை மாணவன் ஒருவன் தாயார் கைத்தொலைபேசியைப் பறித்தமையால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.


இந்தச் சம்பவம் யாழ். சுழிபுரம் - பிளவத்தை பகுதியில் நேற்று (05) இடம்பெற்றுள்ளது.


வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் 14 வயதான மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்ச்சியாகக் கைத்தொலைபேசியில் விளையாட்டில் ஈடுபட்டு வந்தமையால் மாணவனின் தாயார் கைத்தொலைபேசியைப் பறித்து வைத்துள்ளார். அதனைப் பொறுக்க முடியாத மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.