யாழ் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.