நாட்டின் அனைத்து பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்குமான வக்ப் சபையின் விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் அனைத்து பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்குமான வக்ப் சபையின் விசேட அறிவித்தல்!


அனைத்து பள்ளிவாயல்களின் நம்பிக்கை பொறுப்பாளர்களுக்கும் / நம்பிக்கையாளர்களுக்கும் மற்றும் ஏதாவதொரு பள்ளிவாயல் நிர்வாகத்துடன் ஏதாவது வகையில் தொடர்புள்ள நபர்களுக்கும்;


இலங்கை அரசாங்கம், 13.04.2021 ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம். 2223/3 மூலம் இலங்கையிலுள்ள பதினொரு (11) அமைப்புகளை தடைசெய்துள்ளது. 


இந்நிலையில், எந்தவொரு பள்ளிவாயலினதும் நம்பிக்கையாளர்/பொறுப்பாளர் அல்லது பள்ளிவாயல் நிர்வாகத்துடன் ஏதாவது வகையில் தொடர்புள்ள நபர்; குறித்த தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் ஒரு உறுப்பினர் அல்லது தொடர்புபட்டவர் அல்லது அவற்றின் பங்காளிகளாக இருந்தால், அவர்களை உடனடியாக இராஜினாமா செய்யும்படியும் அவர்களது நியமனக் கடிதங்களை திருப்பி ஒப்படைக்கும் படியும் இலங்கை வக்ப் சபை அவர்களை கண்டிப்பாக வேண்டிக்கொள்கிறது.


இலங்கை வக்ப் சபையின் பணிப்புரைக்கமைய,

ஏ.பீ.எம்.  அஷ்ரப்

பணிப்பாளர் - முஸ்லிம் பள்ளிவாயல்கள், தரும நம்பிக்கை சொத்துக்கள் அல்லது வக்புகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.