
மாத்தறை – நில்வலா கங்கையின் தொட்டமுன, பொங்கு முகத்தை அண்மித்த பகுதியில் ஆண் ஒருவரின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலத்திலிருந்து அகற்றப்பட்ட தலைப் பகுதி நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். தலை மீட்கப்பட்ட பகுதியிலிருந்து 150 மீற்றர் தூரத்தில் இருந்து இடது கால் பகுதி ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித எச்சம் அழுகிய நிலையில் காணப்பட்டுவதாக பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் சடலத்தின் உடல் பகுதியும் இன்று (16) மாலை வரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் மாத்தறை பொலிஸார் கூறினர்.
குறித்த தலைப் பகுதி மீட்கப்பட்ட விடயம், குற்றச் செயல் ஒன்றின் பிரதிபலனா அல்லது மிருகங்களால் இழுத்து வரப்பட்டு கைவிடப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விஆசட நிபுணர்களின் உதவியுடன் ஆராய்ந்து வருகின்ரனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
-எம்.எப்.எம்.பஸீர்