நாட்டினுள் மேலுமொரு ஈழத்தை உருவாக்க வெளியான வர்த்தமானி அறிவித்தல்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டினுள் மேலுமொரு ஈழத்தை உருவாக்க வெளியான வர்த்தமானி அறிவித்தல்?


கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மூலமும் வெளியிடப்பட்டுள்ள சட்டத்தின் பிரகாரமும் மற்றுமொரு மாநிலம் அல்லது நாடு உருவாகியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.


அத்துடன் இது மற்றுமொரு ஈழத்தை உருவாக்கிய நிலைமை எனவும் கூறியுள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.


இந்த சட்டமானது தெளிவாக தனியான நாட்டை உருவாக்கும் வழிமுறை என்றும் குறித்த சட்டத்தின் பிரகாரம், துறைமுக நகரை ஆட்சி செய்வது ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆணைக்குழு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


அத்துடன் துறைமுக நகரை உருவாக்க கடலை நிரப்ப வேண்டிய தேவை இருக்கவில்லை என கூறிய அவர் அபிவிருத்திகளை மேற்கொள்ள நாட்டில் காணப்படும் காணிகளை பயன்படுத்தி இருக்கலாம் எனவும் துமிந்த நாகமுவ இதன்போது மேலும் தெரிவித்தார்.


-ஜேவிபி நியூஸ்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.