நாட்டில் மீண்டும் குள்ள மனிதர் நடமாட்டம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மீண்டும் குள்ள மனிதர் நடமாட்டம்?


கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் பரபரப்பை ஏற்படுத்திய குள்ள மனிதர்கள் தொடர்பில் மீண்டும் செய்தி வெளிவர ஆரம்பித்துள்ளது.

பதுளை, இரண்டாம் கட்டை, நெத்ராகம பிரதேசத்தில் கிராமத்திலேயே மீண்டும் குள்ள மனிதர்களின் நடமாட்டம் ஆரம்பித்துள்ளது.

மாத்தறை, தெட்டமுன மீனவ எனும் பகுதியில் இதற்கு முன்னர் குள்ள மனிதர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியது.

அத்துடன் குளியாப்பிட்டிய, எலதலவ மற்றும் முனமுல்தெனிய ஆகிய பிரதேசங்களிலும், அநுராதபுரம் - மஹவிலச்சிய, எந்தகல்ல ஆகிய பிரதேசங்களிலும் அம்பாறை - தமன - தொட்டம பிரதேசங்களிலும் இதற்கு முன்னர் குள்ள மனிதர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியது.

அவ்வாறான சூழலில் பதுளை - இரண்டாம் கட்டை - நெத்ராகம பிரதேசத்தில் குள்ள மனிதர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக தாங்கள் அச்சத்தில் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதேசங்களில் தோன்றும் குள்ள மனிதர்கள் பெண்களை துரத்துவதாகவும் அச்சுறுத்துவதாகவும் பல தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.