அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்ய வலியுறுத்தி கொழும்பில் இன்று (30) பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு − தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித்த சேனாரத்ன, முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த அர்ஷத் நிசாம்தீன், மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரிப்கான், உயர்பீட உறுப்பினர்களான பாயிஸ், தாஹிர், அன்சில், நௌபர் மற்றும் முக்கியஸ்தர்களான ரம்சி, நிஜாம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், சகோதர சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.