இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சரின் வாகன பேரணியின் போது, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடும் எச்சரிக்கையை விடுத்த நீதவான், 50000 ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
இந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில், குறித்த இளைஞன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
தன்னால் ஏற்பட்ட அசெளகரியத்திற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் பொலிஸாரிடம் குறித்த இளைஞன் மன்னிப்பு கோரியுள்ளார்.