கைதாகிய ரிஷாட் பதியுதீன் தொடர்பில் சிஐடிக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைதாகிய ரிஷாட் பதியுதீன் தொடர்பில் சிஐடிக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுப்பாராயின் அவரை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோவினால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு இது தொடர்பிலான அறிவிப்பு எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் முற்பகல் 10.00 மணி தொடக்கம் பாராளுமன்ற கூட்டத்தொடரை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதால் காலை 9.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினரை பாராளுமன்ற வளாகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கொரொனா தொற்று நிலைமை காரணமாக சுகாதார அதிகாரிகளினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைய ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டும் என பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.