ஈஸ்டர் தாக்குதலுக்கு வெடிபொருட்கள் சோதனை செய்யும் போது உடன் இருந்தவர் ராசிக் என அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதலுக்கு வெடிபொருட்கள் சோதனை செய்யும் போது உடன் இருந்தவர் ராசிக் என அடையாளம்!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு தலைமை தாங்கிய பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் மொஹமட் றிழ்வான் வெடிபொருள் சோதனை செய்த வேளையில் உடன் இருந்த சந்தேகநபர், ராசிக் ராசா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த 2018 இல் காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஸஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் மொஹமட் றிழ்வான் கைகள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர், நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற குறித்த வெடிபொருட்கள் சோதனை தொடர்பிலும், பயன்படுத்திய வெடிபொருட்கள் உள்ளிட்டவை தொடர்பிலும் மேலும் விசாரணைகள் மேற்கொள்வது மிக அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.