இவர்களுக்கு தடுப்பூசி பெற்றிருந்தாலும் தனிமைப்படுத்தல் கட்டாயம்; கத்தார் அதிரடி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இவர்களுக்கு தடுப்பூசி பெற்றிருந்தாலும் தனிமைப்படுத்தல் கட்டாயம்; கத்தார் அதிரடி அறிவிப்பு!


கத்தார் நாட்டுக்கு பயணிக்கும் இலங்கையர்கள் கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாலும், கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதாக கத்தார் சுகாதார அமைச்சு நேற்று (26) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருதாவது,

இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தது கத்தாருக்கு பயணிப்பவர்கள் அவர்களது நாடுகளில் உரிய தடுப்பூசியைப் பெற்றிருந்தாலும், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி 06 நாடுகளைச் சேர்ந்தவர்களும், கத்தாருக்கு பயணிக்க 48 மணித்தியாலங்களிற்கு முன்னர் PCR பரிசோதனை செய்து எதிர்மறை சான்றிதழைப் பெற்றிருத்தல் வேண்டும்.  அத்துடன் கத்தாரில் அவர்கள் 10 அல்லது 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மேலும் அவர்கள் கத்தார் வந்து அடுத்த நாள் PCR பரிசோதனை செய்யப்படுவார்கள் என்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத்துடன் நாடுகளிலிருந்து கத்தாருக்கு வந்து, ஏனைய நாடுகளுக்குப் பயணிப்பவர்கள் கத்தார் விமான நிலையத்தில் 300 ரியால்கள் செலுத்தி PCR பரிசோதனை செய்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.