பொலிஸ் ஜீப்பினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான தேரருக்கு பிணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் ஜீப்பினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான தேரருக்கு பிணை!


கொழும்பு – கோட்டை ரயில் நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸ் ஜீப் வண்டியை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஜம்புரேவெல சந்திரரத்தன தேரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


இந்நிலையில், இது குறித்து இன்று (08) மாலை வரை இருவரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.


இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.