அவிசாவளை பகுதியில் இன்று (02) மாலை மர்மபொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதான மூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவிசாவளை – இரத்தினபுரி பிரதான வீதியின் மாதொல பகுதியிலுள்ள இரும்பு பொருள் சேகரிப்பு நிலையமொன்றிலேயே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிந்திய தகவலின்படி எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.