நாட்டில் எதிர்வரும் ஒரு வார காலத்துக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள் தொடர்பான விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் எதிர்வரும் ஒரு வார காலத்துக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள் தொடர்பான விபரம்!


நாட்டில் நேற்றிலிருந்து (06) இலங்கைக்கு நேராகவே சூரியன் உச்சம் கொடுக்கிறது எனத் தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையிலும் உச்சம் கொடுக்குமென அறிவித்துள்ளது.


​அதனால், கொழும்பு, மல்வான, கொஸ்கம, சீதாவக்க, மடல்தெனிய, ரொஸல்ல, தலவாக்கலை, சீதாஎலிய, எட்டாம்பிட்டிய, பசறை, பொரலந்த மற்றும் பல்லடி கலப்புவ ஆகிய இடங்களிலேயே வெப்பமான காலநிலை அதிகரித்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலே குறிப்பிட்ட இடங்களில் எதிர்வரும் 14ஆம் திகதி வரையிலும் நண்பகல் 12.30க்கு சூரியன் உச்சம் கொடுக்குமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.


இக்காலப்பகுதியில், நாட்டின் மேற்​கு, சப்ரகமுவ மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பகல் வேளைகளில் அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.