இணையதளம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்வோருக்கான பொலிஸாரின் எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இணையதளம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்வோருக்கான பொலிஸாரின் எச்சரிக்கை!


இணையதளம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யும்போது, அவதானத்துடன் செயற்படுமாறு, பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.


இணையதளம் ஊடாக பிரசுரிக்கப்படும் தனிநபர்களின் விளம்பரங்கள் குறித்து விசேட அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருடப்படும் அல்லது கொள்ளையிடப்படும் கைத்தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள், மின்சார உபகரணங்கள், கணினி மற்றும் பெறுமதியான வாசனைத் திரவியங்களை, குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் ஊடாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.


அவ்வாறான பொருட்கள், சாலைகளிலும், பொது இடங்களிலும் வைத்தே கொள்வனவாளர்களிடம் கையளிக்கப்படுகின்றன.


பொருட்களை கையளிப்பவர்கள், அதன் பின்னர் உடனடியாக தலைமறைவாகி விடுவதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், இணையதளத்தின் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்பவர்கள், பொருட்களை விற்பனை செய்பவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.