எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் அனைத்து சதொச வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டிலுள்ள ஏனைய வர்த்தக நிலையங்களையும் குறித்த இரு தினங்களில் திறந்து வைக்குமாறும் வர்த்தகர்களுக்கு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.