பலாங்கொடை - கல்தொட்ட பகுதியிலுள்ள தியவினி நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற ஒருவர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கேகாலை - ஹெட்டிமுல்ல பகுதியை சேர்ந்த 30 வயதான ஒருவரே இவ்வாறு மரணித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தமது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றிருந்த நிலையில் அவர் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.