ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையில் தனக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விரிவான விசாரணை ஒன்றினை கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று (08) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுடன் தனக்கு எவ்வித பங்கும் இல்லை எனவும் அவை உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் ஆணைக்குழு முறைப்பாட்டிற்கு பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.