கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

கொழும்பு – கல்கிஸ்ஸை, காலி வீதியில் ஒரு வீட்டின் அருகே கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இறந்தவர் 22 வயதான கல்கிஸ்ஸை பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலம் தற்போது கலுபோவில வைத்தியசாலையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.