VIDEO : இலங்கை கட்டளைகள் நிறுவன வளாகத்தில் அமைதியின்மை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : இலங்கை கட்டளைகள் நிறுவன வளாகத்தில் அமைதியின்மை!

இலங்கை கட்டளைகள் நிறுவன வளாகத்தில் நேற்று (06) அமைதியின்மை ஏற்பட்டது.

நேற்று முன் தின (05) உறுதிமொழிக்கு அமைய, நச்சு இரசாயனப் பொருட்கள் அடங்கிய உற்பத்திகள் தொடர்பில் கட்டளைகள் நிறுவனம் இன்று தகவல்களை வழங்காமையினாலேயே அமைதியின்மை ஏற்பட்டது.

உறுதி வழங்கியதைப் போன்று நச்சு இரசாயனப் பொருட்கள் அடங்கிய உற்பத்திகள் என்னவென்பதை அறியும் நோக்கில் சிங்களே அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு இன்று சென்றிருந்தனர்.

விஷம் அடங்கிய உணவுப் பொருட்களின் பட்டியலை இன்று வழங்குவதாக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இதற்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

சிங்களே அமைப்பின் உறுப்பினர்கள் அவ்விடத்திற்கு இன்று சென்ற போதிலும், வளாகத்திற்குள் பிரவேசிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

பின்னர் பொலிஸார் தலையிட்டு மெடில்லே பஞ்ஞாலோக்க தேரருக்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்குள் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கிய போதிலும், குறித்த உற்பத்தி பட்டியல் வழங்கப்படவில்லை.

இதனிடையே, சிங்கள ராவய அமைப்பு, இலங்கை கட்டளைகள் நிறுவன பணிப்பாளர் நாயகம் மற்றும் அதன் ஊழியர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்தது.

சோசலிச இளையோர் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தர நிர்ணய சபை உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு எதிராக இன்று முறைப்பாடு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.