சிறிய அளவில் கசிப்பு காய்ச்சுவோருக்கு அனுதாப அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும்! -அருந்திக பெர்னாண்டோ

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறிய அளவில் கசிப்பு காய்ச்சுவோருக்கு அனுதாப அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும்! -அருந்திக பெர்னாண்டோ


சிறிய அளவில் கசிப்பு காய்ச்சி மோசடியில் ஈடுபடுவோருக்கு மாற்று வழியொன்று அறிமுகப்படுத்தப்படும் வரை அனுதாபம் காட்டி நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆளும் கட்சி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ கூறுகிறார்.


வென்னப்புவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேசும் போது அவர் இதனை தெரிவித்தார். 


இது தொடர்பில் அவர் வென்னப்புவ ஏ.எஸ்.பி எரிக் பெரேராவுக்கு முன்மொழிந்தார்.


இருப்பினும், ஏ.எஸ்.பி அதற்கு உடன்படவில்லை, கசிப்பு காய்ச்சுவதை ஒரு சுயதொழில் செய்ய முடியாது அது சட்டவிரோதமானது என்றும் சுட்டிக்காட்டினார்.


இது தொடர்பாக தெரண ஊடகம் ஆடியோ பதிவொன்றை ஒளிபரப்பியது.


-எம்.எம் அஹமத்



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.