ஈராக் தலைநகர் பக்தாத் நகரிலுள்ள கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலை ஒன்றில் நேற்று முன்தினம் (24) ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் 110 படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ பற்றியதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் உடனடியாக சுகாதார அமைச்சர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.