தனியார் வகுப்புக்கு சென்ற சிறுமிக்கு நடந்த விபரீதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனியார் வகுப்புக்கு சென்ற சிறுமிக்கு நடந்த விபரீதம்!

கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரை ஏக்கர் பகுதியிலேயே இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்திலேயே ஒன்பது வயதுச் சிறுமி பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பலியானவர் காக்காமுனை அரை ஏக்கரைச் சேர்ந்த குத்புள்ளாஹ் பாத்திமா றிஹா என கிண்ணியாப் பொலிஸார் தெரிவித்தனர். காலையில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் எதிரே வந்த லொறி மோதியதில் சிறுமி பலியாகியுள்ளார்.

விபத்து இடம்பெற்றதை அடுத்து சிறுமி கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து சடலம் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.