நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 617 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இறுதியாக 02 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 96,100 ஐ கடந்துள்ளது.
இன்று (17) இரவு 9.00 மணிவரை 204 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 96,390 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 92,832 பேர் குணமடைந்துள்ளதோடு, 2,907 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.