கத்தாரில் 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோன தடுப்பூசி பெற முடியும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தாரில் 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோன தடுப்பூசி பெற முடியும்!


கத்தாரில் 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோன தடுப்பூசி பெற முடியும் என்பதாக கத்தார் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 


கத்தாரில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட ஆரம்பித்த போது சுகாதார ஊழியர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்டன.


பின்னர் கொரோனா வைரசுக்கெதிரான தடுப்பூசிக்கான வயதெல்லை 50 பின்னர் 40 என குறைக்கப்பட்டது. 

 

தற்போது கத்தாரில் ஒரு நாளைக்கு குறைந்து 25 ஆயிரம் தடுப்பூசிகள், கத்தாரில் அமைந்துள்ள 35 நிலையங்களில் வழங்கப்படும் வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான வயதெல்லையை 35 ஆக கத்தார குறைத்துள்ளது.


கத்தாரில் இதுவரை 1,200,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் வயதெல்லையை 35 ஆக குறைத்துள்ளதாக கத்தார் ஹமத் வைத்தியசாலையின் தொற்று நோய்ப்பிரிவு தலைவர் வைத்தியர் அப்துல் லத்தீப் அல் - ஹால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.