ஏப்ரல் 26 : நாட்டின் கொரோனா நிலவரம் தொடர்பில் எடுக்கப்பட்ட மிக முக்கிய 9 தீர்மானங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஏப்ரல் 26 : நாட்டின் கொரோனா நிலவரம் தொடர்பில் எடுக்கப்பட்ட மிக முக்கிய 9 தீர்மானங்கள்!


  • இலங்கையில் இன்று 952 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 102,331 ஆகவும், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7,110 ஆகவும் காணப்படுகின்றது. 
  • 266 கொரோனா தொற்றாளர்கள் இன்று மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர், குணமடைந்தோர் எண்ணிக்கை 94,577 ஆக உள்ளது.
  • கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 10 கிராம உத்தியோக பிரிவுகள் இன்று தனிமைப்படுத்தப்பட்டன.
  • மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்கள் ஏப்ரல் 30 வரை மூடப்பட்டன
  • மொனராகலை, சியாம்பலந்துடுவ மற்றும் புத்தால கல்வி வலயங்களில் 15 பாடசாலைகள் ஏப்ரல் 30 வரை மூடப்படும்.
  • கொரோனா தொற்றுக்கு இலக்கான ஊழியர் ஒருவர் இனங்காணப்பட்டதால் பத்தரமுல்லயில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகம் ஏப்ரல் 27 மற்றும் 28 திகதிகளில் மூடப்படும்.
  • நாளை கடமையில் ஈடுபடும் ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க அதிகாரம் அனைத்து அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது - பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்
  • தம்புள்ள பொருளாதார மையம் இன்று முதல் இது வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படும் - இராணுவ தளபதி
  • நாடு முழுவதிலும் அனஒத்த்ய் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சை படுக்கைகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான தீவிர சிகிச்சை பிரிவுகளின் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் சுதர்ஷனி
(யாழ் நியூஸ்) - எம் ஐ மொஹமட்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.