இந்தியாவை போல் இலங்கையில் ஒக்சிஜன் பற்றாக்குறையா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியாவை போல் இலங்கையில் ஒக்சிஜன் பற்றாக்குறையா?

தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னரான காலத்தில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களுக்கு, சுவாச கோளாறு அதிகளவில் ஏற்பட்டுள்ளமையினால், அவர்களுக்கான ஒக்சிஜன் அதிகளவில் தேவைப்படுகின்றது.

ஒக்சிஜனுக்கான பற்றாக்குறையை இந்தியா எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், இலங்கையில் அவ்வாறான நிலைமை ஏற்படுமாக இருந்தால், அதனை சமாளிப்பதற்கு இலங்கைக்கு தற்போது இயலுமை உள்ளதா என்ற கேள்வி பலரது மனங்களிலும் எழுந்துள்ளது.

இலங்கை சுகாதார பிரிவிற்கு தேவையான ஒக்சிஜனை, இரண்டு நிறுவனங்களின் ஊடாக தாம் பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் விநியோக பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் கபில விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சுகாதார பிரிவிற்கு ஒக்சிஜனின் தேவை தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

நாட்டிற்கு ஒக்சிஜனின் தேவை காணப்படுமாக இருந்தால், அதனை எதிர்கொள்ள தாம் தயார் என அவர் குறிப்பிடுகின்றார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.