VIDEO : இந்தியாவில் ஆக்சிஜன் டேங்கரில் கசிவு; 22 நோயாளிகள் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : இந்தியாவில் ஆக்சிஜன் டேங்கரில் கசிவு; 22 நோயாளிகள் பலி!

இந்தியா, மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஏற்கனவே கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆக்சிஜன் எடுத்து வர விசாகப்பட்டினத்திற்கு சிறப்பு ரயில் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நாசிக்கில் உள்ள ஜாஹிர் உசேன் மாநகராட்சி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 22 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆக்சிஜன் டேங்கரில் இருந்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஆக்சிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டது.

இதனால் நோயாளிகளுக்கு போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் 22 நோயாளிகள் பரிதாமபாக இறந்துவிட்டனர். ஆரம்பத்தில் 11 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துவிட்டதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அமைச்சர் ராஜேந்திரா தெரிவித்தார்.

இறந்து போன அனைவரும் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்தனர். இச்சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என்றும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபேயும் ஆக்சிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டு 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். நோயாளிகள் உயிரிழந்த செய்தி கேள்விப்பட்டதும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாற்று ஆக்சிஜன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையில் 171 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். சம்பவ இடத்தை மாநில அமைச்சர் சகன் புஜ்பால் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் நோயாளிகள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாசிக் மாவட்ட ஆட்சித்தலைவர் சூரஜும் 22 பேர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளார். கசிவு ஏற்பட்ட ஆக்சிஜன் மருத்துவமனையை சுற்றி வெண்புகையாக பரவி இருந்தது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.