பகிரங்கமாக ஜனாதிபதியை குற்றம் சாட்டிய அமைச்சர் பந்துல குணவர்தன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பகிரங்கமாக ஜனாதிபதியை குற்றம் சாட்டிய அமைச்சர் பந்துல குணவர்தன!

நாட்டில் அரிசி மாபியாவை கட்டுப்படுத்த வேண்டுமாயின் வெளிநாட்டில் இருந்து குறைந்த விலையில் அரிசியை இறக்குமதி செய்வதே ஒரே வழிமுறையாகும். ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இதற்கு இடமளிக்க மறுக்கின்றார் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.

இறக்குமதிக்கு இடமளிப்பார் என்றால் நாட்டில் அரிசி விலையை இலகுவாக கட்டுப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் கூறினார். அரிசி மாபியாவை கட்டுப்படுத்த முடிந்த போதும் இவ்வாறு இறக்குமதி செய்யும் அரிசி மூலமாக கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2015 ஆம் ஆண்டில் அமைச்சர்கள் ஒரு சிலர் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ள போதிலும் அது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேபோல் எம்மால் மாபியாவை கட்டுப்படுத்தும் கொள்கையை முன்னெடுக்க முடிந்த போதும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது கொள்கையில் இருந்து மாறுபட மறுக்கின்றார்.

அதாவது அரிசியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய அவர் இடமளிக்க மறுக்கின்றார். இறக்குமதிக்கு இடமளிப்பார் என்றால் நாட்டில் அரிசி விலையை இலக்குவாக கட்டுப்படுத்த முடியும்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹெஷா விதானகே அரிசி மாபியா குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை கூறினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.