10 ஆயிரம் கைதிகளை விடுவிக்க தயாராகும் இலங்கை அரசு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

10 ஆயிரம் கைதிகளை விடுவிக்க தயாராகும் இலங்கை அரசு!


போதைப்பொருள் விவகாரத்துடன் தொடர்புடைய எண்ணாயிரம் இராசாயன பகுப்பாய்வு நிறைவடைந்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.


நாட்டில் கடந்த 09 மாதக் காலப்பகுதியில் அரச இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் குறித்த அறிக்கைகள் கையளிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை அரச இராசயன பகுப்பாய்வு அறிக்கை நிறைவடைந்துள்ளதன் காரணமாக  நிலுவையில் காணப்படும் வழக்குகளை இதனூடாக நிறைவு செய்யமுடியும் எனவும் நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இதன்காரணமாக தடுப்புக்காவலில உள்ள சுமார் 10 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.


இந்நிலையில் தற்போது நாளாந்தம் ஆயிரத்து 500 அறிக்கைகள் வெளியிடப்படுவதாகவும் நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.