நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க கவனம் செலுத்தும் அரசாங்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க கவனம் செலுத்தும் அரசாங்கம்!


எதிர்வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.


கடந்த நாடாளுமன்ற அமைவுகளில் நாடாளுமன்ற சபா மண்டபத்தில் இந்த விவகாரம் பற்றி அமைச்சர்கள் இடையே பேச்சு இடம்பெற்றுள்ளது.


அவ்வாறு ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு நாடாளுமன்ற முறைமை கொண்டுவந்தால் ஜனாதிபதி வேட்பாளர் நெருக்கடி இனி ஏற்படாது என்றும் அவர்களுக்கு இடையே பேசப்பட்டதாக கூறப்படுகிறது.


அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் பிரிவை உள்ளடக்கினால் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற எதிரணியினரின் ஆதரவையும் பெறலாம் என்றும் அவர்கள் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.