WATCH: வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடினேன்! சுகாதார அமைச்சர் உருக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடினேன்! சுகாதார அமைச்சர் உருக்கம்!

pavithra

கொரோனா தொற்று சிகிச்சையின்போது தாம் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடியதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.


கடந்த ஜனவரி 23ஆம் திகதியன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அமைச்சர் தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


பின்னர் சில வாரங்களாக அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.


இதன்போது சுவாசிப்பதற்கு செயற்கை சுவாச கருவியின்( வென்டிலேட்டரின்) உதவியை அவர் எவ்வாறு பெற வேண்டும் என்பதை விளக்கினார்.


குறித்த சந்தர்ப்பத்தில் தாம் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் போராடியதாக அவர் தெரிவித்தார்.


$ads={1}


தமது உடல்நிலை மோசமடைந்து வருவதை தம்மால் காண முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.


தம்மை காப்பாற்றிய தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையின் மருத்துவர்கள், உள்ளிட்ட முன்னணி பணியாளர்கள், பூமியில் வாழும் தெய்வங்கள் என அவர் குறிப்பிட்டார்.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.