கொழும்பு – டேம் வீதியில் பயணப்பையொன்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் இறுதிச்சடங்கு இன்று (10) இடம்பெற்றது.
குருவிட்ட – தெப்பனாவ பொது மயானத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் நேற்றைய தினம் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் நேற்றைய தினம் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் இறுதிச் சடங்கு இடம்பெற்றுள்ளது.
$ads={1}
எனினும் யுவதியின் தலைப்பகுதியை தேடி தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன் அதற்காக புறக்கோட்டை மற்றும் ஹங்வெல்ல பகுதிகளில் பெறப்பட்ட சி.சி.டி.வி காணொளி பதிவுகளை மீண்டும் பரிசீலிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.