அதுகிரிய பகுதியின் ஒருவல சந்தியில் நபரொருவர் மீது வேன் ஒன்று ஏறிச்சென்றதை அடுத்து நபர் பலியானார்.
குடிபோதையில் பிழையான பக்கத்தில் வண்டியை செலுத்துவந்த நிலையில், முன்னாள் வந்த லாரியுடன் மோதுவதை தடுக்க முயன்ற போதே சாலையோரம் சென்ற நபர் மீது மோதி இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த சம்பவம் அருகில் இருந்த சி.சி.டிவி யில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், விபத்து ஏற்பட்டவுடன் விபத்தை ஏற்படுத்திய போதையில் இருந்த ஓட்டுநரே விபத்துக்குள்ளான நபரை ஒருவல வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
$ads={1}
சம்பவத்தில் பலியானவர் 49 வயதான ஐந்து குழந்தைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.