ரயில் - பஸ் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இரத்தம் வழங்க ஒன்று திரண்ட இளைஞர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரயில் - பஸ் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இரத்தம் வழங்க ஒன்று திரண்ட இளைஞர்கள்!


தலைமன்னார் பகுதியில் இன்று (16) மதியம் இடம்பெற்ற ரயில் விபத்து காரணமாக காயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களுக்கு தேவையான இரத்த தட்டுப்பாடு வைத்தியசாலையில் நிலவி வந்தது.


இந்நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் இரத்தம் வழங்க மக்களிடம் கோரிக்கை விடுத்தது.


அதற்கு அமைவாக மன்னாரின் பல பகுதிகளில் இருந்து இளைஞர், யுவதிகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் இன்று மாலை மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு வருகை தந்து இரத்தம் வழங்கியுள்ளனர்.


குறித்த விபத்தில் 25 ற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் இரத்தம் வழங்குவதற்கு தன்னார்வத்துடம் வருகை தந்து இரத்தம் வழங்கியுள்ளனர்.


$ads={1}


எனினும் வைத்தியசாலையின் இன்றைய அவசர கால நிலை காரணமாக குறிப்பிட்ட அளவு குருதியே பெற்றுக்கொள்ளப்பட்டு இரத்தம் சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


இருப்பினும் இன்னும் இரத்த தேவை காணப்படுவதனால் நாளைய தினமும் மன்னார் பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்தம் வழங்க முடியும் என தெரிவிக்கப்படுள்ளது.


-தெரண 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.