நாட்டில் இன்று (16) மேலும் 02 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்பிற்பாடு மொத்த மரணங்களின் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர், கண்டி பொது வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (15) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொரோனா நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவ பீட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (16) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், இருதய நோய் நிலை, கொரோனா நிமோனியா நிலை, உயர் இரத்த அழுத்தம், உக்கிர நீரிழிவு நிலை மற்றும் சிறுநீரக நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.