இலங்கை தேசிய அணிக்கும் இலங்கை லெஜெண்ட்ஸ் அணிக்கும் இடையில் டி20 போட்டி ஒன்றை ஏற்பாடு செய்ய விரும்புவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்றைய (14) இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான முந்தைய போட்டி நிகழ்ச்சியின் போது ஹரி டிவியுடன் பேசிய அவர் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
மேலும் தற்போதைய தேசிய அணி வீரர்கள் களத்தில் உள்ள லெஜண்ட்ன்ஸ் அணியின் அர்ப்பணிப்பிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
$ads={1}
"அவர்கள் எப்போதும் விளையாட்டை வெல்லும் மனப்பான்மையில் இருக்கிறார்கள், இது களத்தில் அவர்களின் உடல் மொழியில் எடுத்துக்காட்டுகிறது" என்று அவர் கூறினார்.
"டில்ஷானின் பீல்டிங்கைப் பாருங்கள், சனத் ஜயசூரிய துடுப்பாட்டத்தில் தவறவிடும் பட்சத்தில் பந்துவீச்சின் மூலம் எவ்வாறு சரி செய்கிறார் என்பதைப் பாருங்கள், இதுதான் எங்கள் தற்போதைய வீரர்கள் இந்த லெஜெண்ட்க்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.