VIDEO: ஓடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த வேன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: ஓடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த வேன்!

பாணந்துறை -ஹொரணை வீதியில் பயணித்த வேன் வண்டி ஒன்று இன்று (31) பிற்பகல் வாகட பிரதேசத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.


இந்த வேன் பண்டாரகமவிலிருந்து பாணந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வேனின் பின்புறத்தில் தீப்பிடித்துள்ளதாக சாரதிக்கு தகவல் கொடுத்ததாக பாணந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.


துரிதமாக செயற்பட்ட சாரதி வேனை வீதியோரமாக நிறுத்திவிட்டு வேன் தீப்பிடிப்பதற்கு முன்னதாக மற்றொரு நபருடன் அதிலிருந்து குதித்துள்ளார்.


பின் மொரட்டுவ மாநகர தீயணைப்பு படையினர் தீயை அணைத்துள்ளனர்.


தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேன் தீப்பிடித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கும் பாணந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.