2020 க.பொ.த சாதாரண தர பாடசாலை பரீட்சார்த்திகளின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் சம்பந்தப்பட்ட நிலையங்களில் எதிர்வரும் மே 18 முதல் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை நடைபெறும் திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு மார்ச் 01 முதல் 10 வரை நடைபெற்ற க.பொ.த (சா/த) பரீட்சையில் 622,000 பரீட்சார்த்திகள் 4,513 நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததுடன் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மார்ச் 27ஆம் திகதி ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.