புர்கா மற்றும் நிகாப் மீதான தடையை அமல்படுத்துவது தொடர்பான முடிவு கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று அரசாங்கம் இன்று (16) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்கம் அவசரப்படாது என்றும் அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தேசிய பாதுகாப்பு தொடர்பாக புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஆலோசனைக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் இந்த விடயத்தில் பொதுவாக ஒருமித்த முடிவு விரைவில் எட்டப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட தடைகளில் கீழ் புர்கா மற்றும் நிகாப் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் விளக்கினார்.
கடந்த சனிக்கிழமை (13), பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர புர்கா மற்றும் நிகாப் தடை குறித்து அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும் தாளில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அதை ஒப்புதலுக்காக அமைச்சரவையில் சமர்ப்பித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அரசாங்கம் அவசரப்படாது என்றும் அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தேசிய பாதுகாப்பு தொடர்பாக புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஆலோசனைக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் இந்த விடயத்தில் பொதுவாக ஒருமித்த முடிவு விரைவில் எட்டப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட தடைகளில் கீழ் புர்கா மற்றும் நிகாப் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் விளக்கினார்.
கடந்த சனிக்கிழமை (13), பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர புர்கா மற்றும் நிகாப் தடை குறித்து அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும் தாளில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அதை ஒப்புதலுக்காக அமைச்சரவையில் சமர்ப்பித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
බුර්කා තහනමට හදිසියක් නැහැ, - කෙහෙළිය රඹුක්වැල්ල
Posted by Newshub.lk on Monday, March 15, 2021