UPDATE: பசறை பஸ் விபத்து; வெளியான மேலதிக தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

UPDATE: பசறை பஸ் விபத்து; வெளியான மேலதிக தகவல்!


இன்று (20) அதிகாலை பசறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த 33 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


இதில், ஐந்து குழந்தைகள் உட்பட 33 பேர் பசறை மற்றும் பதுளை வைத்தியாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்நிலையில், விபத்தில் 09 ஆண்களும், 06 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.


இந்த சம்பவத்தில் லுணுகலை பகுதியில் வசிக்கும் 53 வயதான பஸ்ஸின் சாரதி உயிரிழந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர் தற்போது கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மேலும், வழமையான சாரதி குறித்த பஸ்ஸினை செலுத்தவில்லை எனவும், இந்த பஸ்ஸினை செலுத்த வேண்டிய சாரதிக்கு பதிலாக மற்றுமொருவர் இந்த பஸ்ஸினை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.'


இந்நிலையில், விபத்து இடம்பெறும் போது பஸ்ஸிற்கு எதிரே பயணித்த பாரவூர்தியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், சாரதியை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.