PHOTOS: கொழும்பில் பெண் கொலை விவகாரம்; பயணிகள் பேருந்தில் பிணத்துடன் பயணித்த சந்தேக நபர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: கொழும்பில் பெண் கொலை விவகாரம்; பயணிகள் பேருந்தில் பிணத்துடன் பயணித்த சந்தேக நபர்!


கொழும்பு - டாம் வீதியில் சூட்கேஸிற்குள் வைக்கப்பட்டிருந்த சடலத்திற்குரியவர், 26 வயதான யுவதியென பொலிசார் சந்தேகிக்கின்றனர். ஹன்வெல்ல பகுதியில் அவர் கொல்லப்பட்டு சடலம் சூட்கேஸிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

டாம் வீதியில் கருப்பு நிற சூட்கேஸ் ஒன்று நீண்டநேரமாக காணப்பட்டதையடுத்து, நேற்று (01) பிற்பகல் 2.30 மணியளவில் டாம் வீதி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதித்த பொலிசார், சூட்கேஸிற்குள் கருப்பு நிற பொலித்தீனில் சுற்றப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் இருப்பதை அவதானித்தனர்.

சூட்கேஸிற்குள் சடலத்தின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது.

அந்த பகுதியிலுள்ள CCTV கமரா காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் நடத்திய விசாரணையில், சடலத்தை கொண்டு வந்து வைத்தவரையும், சூட்கேஸ் கொண்டுவரப்பட்ட பயணிகள் பேருந்தையும் அடையாளம் கண்டனர்.

$ads={1}

இதன்படி, பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் அடையாளம் காணப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யுவதியை ஹன்வெல்ல பகுதியில் கொலை செய்து, சூட்கேஸிற்குள் அடைத்து, பயணிகள் பேருந்தில் கொண்டு வந்து, வீதியோரம் இறக்கி வைத்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த 3 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.