ஒக்டோபர் முதல் கையடக்க தொலைப்பேசி இலக்கத்தை மாற்றாது சேவை வழங்குநரை மாற்றும் புதிய திட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒக்டோபர் முதல் கையடக்க தொலைப்பேசி இலக்கத்தை மாற்றாது சேவை வழங்குநரை மாற்றும் புதிய திட்டம்!

இந்த ஆண்டு (2021) ஒக்டோபர் மாதம் முதல் எண் பெயர்வுத்திறன் சேவையை ( Number portability facility) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) தெரிவித்துள்ளது. 

இதனால் கையடக்க தொலைபேசி பயன்படுத்துபவர்கள் தங்கள் தொலைபேசி இலக்கங்களை தக்க வைத்துக் கொண்டு வேறு சேவை வழங்குநர்களை ( Network Providers) உபயோகிக்க முடியும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எண் பெயர்வுத்திறன் சேவையை செயல்படுத்துவதற்கான பொது ஆலோசனைகளை TRCSL முடித்துள்ளது.

இந்த கொள்கைக்காக அனைத்து சேவை வழங்குநர்களினதும் ஆதரவையும் பெற்ற பின்னர், எண் பெயர்வுத்திறனை செயல்படுத்துவது தொழில்நுட்ப விவாத நிலைக்கு நகர்ந்துள்ளது என்று TRCSL இயக்குநர் ஜெனரல் ஓஷத சேனாநாயக்க தெரிவித்தார்.

பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையத்துடன் கலந்தாலோசித்து இந்த சேவை செயல்படுத்தப்படும் என்று அவர் மேலும் அறிவித்தார்.

பாகிஸ்தானில் எண் பெயர்வுத்திறனை செயல்படுத்துவதில் வெற்றி பெற்றதன் காரணமாகவே நிறுவனம் இதனை இலங்கையில் அறிமுகப்படுத்த உத்தேசித்தது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.