யாழ்ப்பாணத்தில் இன்று (26) நகர மையம் உட்பட நகரின் ஒரு பக்கத்தை கொரோனா பரவல் காரணமாக முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், யாழ்ப்பாண சந்தை பகுதியில் 670 நபர்களிடமிருந்து பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையிலே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
நேற்று (25) மட்டும் 80 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட கொரோனா தடுப்பு குழு குறித்த பகுதியினை முடக்க தீர்மானித்தது.
இதன் அடிப்படையில், யாழ்ப்பாணம்-காங்கேசந்துரை வீதியின் ஒரு பகுதி, யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையம், யாழ்ப்பாண மருத்துவமனை வீதியின் ஒரு பகுதி, யாழ்ப்பாண பிரதான சந்தை, திருநெல்வேலி சந்தை மற்றும் யாழ்ப்பாணம் கோட்டை பகுதி ஆகியவற்றை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாண சந்தை பகுதியில் 670 நபர்களிடமிருந்து பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையிலே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
நேற்று (25) மட்டும் 80 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட கொரோனா தடுப்பு குழு குறித்த பகுதியினை முடக்க தீர்மானித்தது.
இதன் அடிப்படையில், யாழ்ப்பாணம்-காங்கேசந்துரை வீதியின் ஒரு பகுதி, யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையம், யாழ்ப்பாண மருத்துவமனை வீதியின் ஒரு பகுதி, யாழ்ப்பாண பிரதான சந்தை, திருநெல்வேலி சந்தை மற்றும் யாழ்ப்பாணம் கோட்டை பகுதி ஆகியவற்றை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.