LOCKDOWN கொரோனா - நாட்டில் மேலும் ஒரு பகுதி முடக்கப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LOCKDOWN கொரோனா - நாட்டில் மேலும் ஒரு பகுதி முடக்கப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் இன்று (26) நகர மையம் உட்பட நகரின் ஒரு பக்கத்தை கொரோனா பரவல் காரணமாக முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், யாழ்ப்பாண சந்தை பகுதியில் 670 நபர்களிடமிருந்து பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையிலே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

நேற்று (25) மட்டும் 80 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட கொரோனா தடுப்பு குழு குறித்த பகுதியினை முடக்க தீர்மானித்தது.

இதன் அடிப்படையில், யாழ்ப்பாணம்-காங்கேசந்துரை வீதியின் ஒரு பகுதி, யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையம், யாழ்ப்பாண மருத்துவமனை வீதியின் ஒரு பகுதி, யாழ்ப்பாண பிரதான சந்தை, திருநெல்வேலி சந்தை மற்றும் யாழ்ப்பாணம் கோட்டை பகுதி ஆகியவற்றை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.