இன்று (15) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினால் 50 வரையிலான வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.40 மணியளவில் இந்த தீ பரவல் ஆரம்பித்துள்ளது.
எனினும், குறித்த தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கிரேண்ட்பாஸ் பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரம் எதுவும் மதிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.