2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணியின் முதல் கட்டம் நாளை (27) ஆரம்பமாகவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 86 பாடசாலைகள் மற்றும் 111 பிற மையங்கள் இதற்காக தயாராக உள்ளதாக பரீட்சைகள் ஆணையத்தின் தலைவர் சனத் பூஜித தெரிவித்தார்.
முதற்கட்ட பணிகள் நாளை முதல் ஏப்ரல் 5 வரை மேற்கொள்ளப்படவுள்ளது.