இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.
வேவுட பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவரும், நுகதலாவ பிரதேசததை சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவரும், கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவரும், பண்டாரகம பிரதேசததை சேர்ந்த 51 வயதுடைய ஆணொருவர் மற்றும் காலி பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.