90 நாட்கள் தடுப்புக்காவலில் அசாத் சாலி; நீதிமன்றுக்கு பீ அறிக்கை சமர்ப்பிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

90 நாட்கள் தடுப்புக்காவலில் அசாத் சாலி; நீதிமன்றுக்கு பீ அறிக்கை சமர்ப்பிப்பு!


மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக்குழுவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக்காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


அத்துடன் அசாத் சாலியின் கைது தொடர்பில் பிரதானமாக மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தை கோடிட்டு, அடிப்படைவாதிகளை பாதுகாத்ததாக கூறி கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீராகல முன்னிலையில் சிஐடி இன்று பீ அறிக்கையும் சமர்ப்பித்தது. அதன்படி சனூன் சாலி மொஹம்மட் அசாத் எனப்படும் அசாத் சாலி தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிஐடி நீதிமன்றுக்கு அறிவித்தது.


இவ்வாறு அசாத் சாலியை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை, பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, MOD/ LEG/ PTA/ 21/2021 எனும் கடிதம் ஊடாக கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வழங்கியுள்ளார். 


அரசியலமைப்பின் 44 (2 ) ஆம் உறுப்புரையுடன் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 9 (1) ஆம் பிரிவின் கீழ் இந்த தடுப்புக் காவல் அனுமதி ஜனாதிபதியினால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.


அசாத் சாலி கைது செய்யப்பட்டு, பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டதன் பின்னர் இந்த 90 நாள் தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.


-எம்.எப்.எம்.பஸீர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.