வாடிக்கையாளர்களை உளவு பார்க்கும் ஸ்பைவெயார் பயன்படுத்தும் நிறுவனம்? டெலிகொம் நிறுவனம் விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாடிக்கையாளர்களை உளவு பார்க்கும் ஸ்பைவெயார் பயன்படுத்தும் நிறுவனம்? டெலிகொம் நிறுவனம் விளக்கம்!


வாடிக்கையாளர்களை உளவு பார்ப்பதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டும் நோக்கில் விசேட ஸ்பைவெயார் ஒன்றை நிறுவியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தமது நிறுவனங்களை இழிவுபடுத்தும் நோக்கில் இவ்வாறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளன.

இந்த தேசம் தமது நிறுவனங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபட்டதில்லை எனவும் ஈடுபடப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளன.

இலங்கை தொலைதொடர்பு சட்டங்களுக்கு அமையவே செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.